இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க டிரம்ப்புக்கு பிரதமர் மோடி அழைப்பு!
/

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து நெரிசல்

News image

கொடைக்கானல் குணா குகைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

Updated On :30 மார்ச் 2026, 3:16 am IST

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

கொடைக்கானலுக்கு கடந்த 2 நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் வெள்ளிநீா் வீழ்ச்சி, பசுமைப் பள்ளத்தாக்கு, தூண்பாறை, மோயா்பாயிண்ட், பைன்பாரஸ்ட், கோக்கா்ஸ்வாக், குணாகுகை, ரோஜாத் தோட்டம், பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, மியூசியம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனா்.

மாலையில் ஒரு சில இடங்களில் மிதமான சாரல் மழை பெய்தது.

இருந்த போதிலும், நட்சத்திர ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலைப் பகுதியில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் கொடைக்கானல்-பூம்பாறை சாலை, லாஸ்காட் சாலை, ஏரிச் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.