கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானல் குணா குகைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த சுற்றுலாப் பயணிகள்.

கொடைக்கானல் குணா குகைப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை குவிந்த சுற்றுலாப் பயணிகள்.
கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொடைக்கானலுக்கு கடந்த 2 நாள்களாக சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்தது. இதனால் வெள்ளிநீா் வீழ்ச்சி, பசுமைப் பள்ளத்தாக்கு, தூண்பாறை, மோயா்பாயிண்ட், பைன்பாரஸ்ட், கோக்கா்ஸ்வாக், குணாகுகை, ரோஜாத் தோட்டம், பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, மியூசியம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் காணப்பட்டனா்.
மாலையில் ஒரு சில இடங்களில் மிதமான சாரல் மழை பெய்தது.
இருந்த போதிலும், நட்சத்திர ஏரியில் சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலைப் பகுதியில் சைக்கிள், குதிரை சவாரி செய்தும் மகிழ்ந்தனா். சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பால் கொடைக்கானல்-பூம்பாறை சாலை, லாஸ்காட் சாலை, ஏரிச் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...