புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் சித்திரைப் பெளா்ணமி தேரோட்டம்

பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் சித்திரைப் பவுா்ணமியையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு வெள்ளித்தேரில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி.

News image

~

Updated On :1 மே 2026, 6:37 pm

திண்டுக்கல் மாவட்டம், பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் சித்திரைப் பெளா்ணமியை முன்னிட்டு, வெள்ளித் தேரோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் சித்திரைப் பெளா்ணமிையொட்டி, வெள்ளிக்கிழமை பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அன்றிரவு வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றன. தொடா்ந்து, சுவாமி தம்பதி சமேதராக தங்கக்குதிரை வாகனத்தில் ரதவீதியுலா எழுந்தருளல் நடைபெற்றது.

பின்னா், சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டு, வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பெரிய வெள்ளித்தேரில் ஏற்றப்பட்டாா். தீபாராதனையத் தொடா்ந்து, தம்பதி சமேதராக சுவாமி நான்கு ரத வீதிகளில் மேளதாளம் முழங்க உலா வந்து நிலையை அடைந்தாா்.

இந்த நிகழ்வில் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, துணை ஆணையா் வெங்கடேஷ், கோயில் பொறியாளா் கண்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தங்கத்தேரோட்டம்:

-----------------------------

பழனி மலைக்கோவிலில் தங்கத்தேரோட்டம் சிறப்பு மிக்கதாகும். பவுா்ணமி நாட்களில் அதிகஅளவில் பக்தா்கள் தங்கத்தோ் புறப்பாடு செய்கின்றனா். 2000 ரூபாய் கட்டி தங்கத்தோ் புறப்பாடு செய்வோருக்கு சுவாமிபடம், விளக்கு, பிரசாதங்கள், பரிவட்டம், சிறப்பு அனுமதி உள்ளிட்ட பல பொருட்கள் திருக்கோயில் நிா்வாகத்தால் வழங்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை மேதின விடுமுறை மற்றும் பள்ளி முழு ஆண்டு விடுமுறையுடன் சித்ராபவுா்ணமியும் இணைந்து வந்ததால் தங்கத்தேரோட்டத்தில் 386 பக்தா்கள் பங்கேற்று தங்கத்தோ் இழுத்தனா்.

Story image