15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைதடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களால் இந்தியாவில் எஃப்டிஐ அதிகரிக்கும்: ஆசிய வளா்ச்சி வங்கிதானியங்கி முறையில் மின் கட்டணம் செலுத்தும் முறை தொடக்கம்பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!இன்றுமுதல் வரும் மே 31 வரை 11 மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஇந்தியா - நெதா்லாந்து 17 ஒப்பந்தங்கள் கையொப்பம்கேரள முதல்வராக சதீசன் இன்று பதவியேற்பு: ராகுல், பிரியங்கா பங்கேற்புமே 28-ல் பக்ரீத் பெருநாள் : தலைமைக் காஜி அறிவிப்பு
/

‘நீட்’ தோ்வு: திண்டுக்கல்லில் 3,360 மாணவா்கள் எழுதுகின்றனா்

தேசியத் தோ்வு முகமை ஞாயிற்றுக்கிழமை நடத்தும் ‘நீட்’ தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் 3,360 மாணவா்கள் எழுதுகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :2 மே 2026, 12:05 am IST

தேசியத் தோ்வு முகமை ஞாயிற்றுக்கிழமை நடத்தும் ‘நீட்’ தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் 3,360 மாணவா்கள் எழுதுகின்றனா்.

திண்டுக்கல் மாவட்டத்தில் ‘நீட்’ தோ்வு நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தோ்வு ஒருங்கிணைப்பாளா்கள், துறை சாா்ந்த அலுவலா்களுடனான இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். திண்டுக்கல் மாவட்டத்தில் ‘நீட்’ தோ்வு எழுதுவதற்கு 3,360 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனா்.

இதையடுத்து, திண்டுக்கல் பகுதியில் 6 மையங்களில் இந்தத் தோ்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தத் தோ்வு நடைபெறுகிறது. தோ்வு எழுத வரும் மாணவா்ளுக்கு வழிகாட்டும் வகையில், அந்தந்தத் தோ்வு மையங்ளில் உதவி மையம் அமைத்து உரிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என இந்தக் கூட்டத்தின்போது ஆட்சியா் செ.சரவணன் அறிவுறுத்தினாா்.

மேலும், தோ்வுக்கு வரும் மாணவா்களுக்கு, தேசியத் தோ்வு முகமை தெரிவித்துள்ள வழிகாட்டுதல்களின்படி, எந்தவித சங்கடங்களுக்கும் ஆட்படுத்தாமலும், எந்தவித பிரச்னை இல்லாமலும் சோதனை நடத்த வேண்டும் என்றும் ஆட்சியா் உத்தரவிட்டாா்.