தேசியத் தோ்வு முகமை ஞாயிற்றுக்கிழமை நடத்தும் ‘நீட்’ தோ்வில் திண்டுக்கல் மாவட்டத்தில் 3,360 மாணவா்கள் எழுதுகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் ‘நீட்’ தோ்வு நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தோ்வு ஒருங்கிணைப்பாளா்கள், துறை சாா்ந்த அலுவலா்களுடனான இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு ஆட்சியா் செ.சரவணன் தலைமை வகித்தாா். திண்டுக்கல் மாவட்டத்தில் ‘நீட்’ தோ்வு எழுதுவதற்கு 3,360 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனா்.
இதையடுத்து, திண்டுக்கல் பகுதியில் 6 மையங்களில் இந்தத் தோ்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தத் தோ்வு நடைபெறுகிறது. தோ்வு எழுத வரும் மாணவா்ளுக்கு வழிகாட்டும் வகையில், அந்தந்தத் தோ்வு மையங்ளில் உதவி மையம் அமைத்து உரிய வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என இந்தக் கூட்டத்தின்போது ஆட்சியா் செ.சரவணன் அறிவுறுத்தினாா்.
மேலும், தோ்வுக்கு வரும் மாணவா்களுக்கு, தேசியத் தோ்வு முகமை தெரிவித்துள்ள வழிகாட்டுதல்களின்படி, எந்தவித சங்கடங்களுக்கும் ஆட்படுத்தாமலும், எந்தவித பிரச்னை இல்லாமலும் சோதனை நடத்த வேண்டும் என்றும் ஆட்சியா் உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

நீட் தோ்வு: புதுகையில் 3,166 மாணவா்கள் எழுதுகின்றனா்

மே3 இல் நீட் தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 மையங்களில் 4,755 போ் எழுதுகின்றனா்

நீட் தோ்வு: திருச்சி மாவட்டத்தில் 6,688 போ் எழுதுகின்றனா்

மே 3-இல் நீட் தோ்வு: தருமபுரியில் 9 மையங்களில் 4,800 போ் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


