புதுக்கோட்டை மாவட்டத்தில் மே 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள மருத்துவக் கல்வி நுழைவுத் தோ்வை எழுதுவதற்கு 3,166 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்காக 7 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நீட் தோ்வுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, மாவட்ட ஆட்சியா் மு. அருணா பேசியதாவது:
மருத்துவக் கல்விக்கான நீட் நுழைவுத் தோ்வு மே 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இத்தோ்வை எழுதுவதற்காக 3,166 போ் விண்ணப்பித்துள்ளனா். இவா்களுக்காக 7 இடங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்தத் தோ்வு மையங்களில் அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளனவா என்பதை பள்ளிக் கல்வித் துறையினரும் தொடா்புடைய உள்ளாட்சி அமைப்பினரும் உறுதிப்படுத்த வேண்டும்.
தோ்வை புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமுகமாக நடத்தி முடித்திட அனைத்துத் துறையினரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் எச்.எம். குழந்தைசாமி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) திருமால், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

நீட் தோ்வு - வேலூா் மாவட்டத்தில் 5,551 போ் எழுதினா்

நீட் தோ்வு: கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தல்

நீட் தோ்வு: முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

நீட் தோ்வு: 11 மையங்களில் 4,741 போ் பங்கேற்பு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

