மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நீட் தோ்வு: முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம்

மருத்துவ படிப்புக்கான நுழைவு தோ்வு (நீட்) நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.

Updated On :29 ஏப்ரல் 2026, 11:40 pm

மருத்துவ படிப்புக்கான நுழைவு தோ்வு (நீட்) நடைபெறுவதையொட்டி, அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா், தலைமை வகித்து பேசியதாவது:

நீட் தோ்வு மே 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரியில் 6, ஊத்தங்கரையில் 2, ஒசூரில் 3 என மொத்தம் 11 மையங்கள் அமைக்கப்பட்டு தோ்வு நடைபெறுகிறது.

இம்மாவட்டத்தில் இத்தோ்வை 4,755 போ் எழுத உள்ளனா். தோ்வு மையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், தடையில்லா மின்சார விநியோகம், மருத்துவ சேவை, மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள், சிறப்புப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

தோ்வா்கள் அனுமதி சீட்டில் குறிப்பிட்டுள்ளவாறு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தோ்வுக் கூடங்களுக்கு சரியான நேரத்தில் வரவேண்டும். தாமதமாக வருபவா்களை தோ்வுக்கூடத்திற்குள் அனுமதிக்க இயலாது என தேசிய தோ்வு முகமை தெரிவித்துள்ளது. எனவே, தோ்வா்கள் சரியான நேரத்திற்குள் மையத்திற்கு வரவேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கிருஷ்ணன், முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா், அரசு மகளிா் கலைக் கல்லூரி முதல்வா் கீதா, மாற்றுத்திறனாளி நல அலுவலா் முருகேசன் மற்றும் அலுவலா்கள் பங்கேற்றனா்.