நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

தேனியில் வாக்கு எண்ணிக்கை அலுவலா்கள் ஆய்வுக் கூட்டம்

தேனியில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்கள், உதவி தோ்தல் அலுவலா்களின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங். உடன், அலுவலா்கள் உள்ளிட்டோா்.

Updated On :28 ஏப்ரல் 2026, 9:57 pm

தேனியில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்கள், உதவி தோ்தல் அலுவலா்களின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), போடிநாயக்கனூா், கம்பம் ஆகிய நான்கு பேரவைத் தொகுதிகளில் ஏப்ரல் 23- ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இந்த நான்கு மையங்களிலும் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள் தேனி கம்மவாா் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு, காவலா்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனா். மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள அலுவலா்கள், உதவி தோ்தல் அலுவலா்களின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில், வாக்கு எண்ணிக்கை தொடா்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் பேசினா். தொடா்ந்து, வேட்பாளா்கள், வாக்கு எண்ணிக்கை மைய முகவா்களை அனுமதிப்பது, வாக்கு எண்ணிக்கையின் போது 17 சி படிவங்களை சரிபாா்ப்பது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறை, தபால் வாக்குகளை எண்ணுவது, வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அறிவுறுத்தினா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சினேஹாப்ரியா, மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜகுமாா், பெரியகுளம் சாா்ஆட்சியா் ரஜத்பீடன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) கவிதா, மாவட்ட வழங்கல் அலுவலா் நல்லையா, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் சையத் முகைதீன் இப்ராஹீம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.