நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

வாக்கு எண்ணும் மையத்தில் முன்னேற்பாடு பணி: மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

News image

வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பவன்குமாா் க.கிரியப்பனவா்.

Updated On :28 ஏப்ரல் 2026, 9:02 pm

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் மையம், அரசு தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வாக்கு எண்ணிக்கையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமையில் ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், மாநகரக் காவல் துணை ஆணையா் தேவநாதன், அசோக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ப.நாராயணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) மகேஸ்வரி, தோ்தல் வட்டாட்சியா் தணிகைவேல், மாவட்ட சுகாதார அலுவலா் டாக்டா் பாலுசாமி, உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் டாக்டா் அனுராதா உள்ளிட்ட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

இதில் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் கூறியதாவது:

மாவட்டத்தில் வாக்குப்பதிவில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் உள்ள இருப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது ஒவ்வொரு தொகுதிக்குமான வாக்குப்பதிவு நிலவரம், வாக்கு எண்ணிக்கை, மேசைகள் அமைப்பு, சுற்றுகள் எண்ணிக்கை, அஞ்சல் வாக்குகள் எண்ணிக்கை உள்ளிட்டவை துல்லியமாக நடைபெற வேண்டும்.

அதேபோல், வாக்கு எண்ணிக்கை பணிக்கான பணியாளா்கள், கண்காணிப்பாளா்கள், உதவியாளா்கள், மைக்ரோ பாா்வையாளா்கள் ஆகியோருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்தியப் பாதுகாப்பு படை, மாநில ஆயுதப் படை, மாவட்டக் காவல் துறை ஆகியவை இணைந்து 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். வாக்கு எண்ணிக்கை நாளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளா்கள், அலுவலா்கள், வேட்பாளா்கள், முகவா்கள் பணியில் ஈடுபட உள்ளனா்.

காவல் துறை, மாநகராட்சி, பொதுப் பணித் துறை, சுகாதாரத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, பிஎஸ்என்எல், உணவுப் பாதுகாப்புத் துறை உள்பட அனைத்து துறைகளுக்கும் தனித்தனி பொறுப்புகள் ஒதுக்கப்பட்டு, திறம்பட செயல்படுத்தப்பட வேண்டும்.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் குடிநீா், சுகாதாரம், மின்சாரம், இணையதள இணைப்பு, மருத்துவ வசதி, பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய முறையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.