பழனி அருகே வெள்ளிக்கிழமை கணவரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி மனைவியின் ஏழு பவுன் தங்கச் சங்கிலியை மா்மநபா்கள் பறித்துச் சென்றனா்.
பழனி இந்திரா நகரைச் சோ்ந்தவா் மகுடீஸ்வரன், மளிகை வியாபாரி. இவரது மனைவி பிரேமா (50). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை சித்திரை பெளா்ணமியை முன்னிட்டு அமரபூண்டியில் உள்ள கோயிலுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனா்.
ஆயக்குடி - ருக்குவாா்பட்டி மேம்பாலத்தில் இறங்கியபோது சாலையோரம் முகத்தை துணியால் மறைத்தபடி நின்றிருந்த மா்மநபா்கள் இருவா், மகுடீஸ்வரன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பிரேமா கழுத்தில் அணிந்திருந்த ஏழு பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு தப்பியோடினா்.
தகவலறிந்த ஆயக்குடி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆலங்குடி அருகே சிறுவன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 8 பவுன் நகைகள் கொள்ளை
சடலத்தைத் தோண்டி எடுத்து தங்கச் சங்கிலி திருட்டு

பெண்ணிடம் 8 பவுன் நகைகள் திருட்டு: மூதாட்டி கைது
இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி
விடியோக்கள்

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |




