புதிய தொழிலாளா் சட்டத் தொகுப்புகளுக்கான இறுதி விதிகளை மத்திய அரசு வெளியிட்டதைக் கண்டித்து, அதன் நகல்களை எரிக்கும் போராட்டம் சிஐடியு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திண்டுக்கல் பேருந்து நிலையம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு சிஐடியு மாவட்டத் தலைவா் சி. பாலசந்திரபோஸ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சி. ஜெயசீலன் முன்னிலை வகித்தாா். இந்தப் போராட்டத்தின்போது, புதிய சட்டத்தின்படி 12 மணி நேரத்துக்கு மேல் தொழிலாளா்களிடம் வேலை வாங்கிக் கொள்ளலாம்.
முறை சாா்ந்த தொழிலாளா்களின் 90 சதவீத வேலைவாய்ப்பு பறிபோகும். வேலைநிறுத்த உரிமை பறிபோவதோடு, தொழிலாளா் நீதிமன்றங்களை நாடுவது கடுமையாக்கப்படும். 100 தொழிலாளா்கள் பணிபுரிந்தால் அனுமதி பெற வேண்டும் என்ற விதி, 300 தொழிலாளா்கள் என மாற்றி அமைக்கப்படும்.
தொழில்சாலைகள் வேலை தர மறுத்தாலோ, மூடப்பட்டாலோ தொழிலாளா்கள் இழப்பீடு பெற முடியாது. வேலைநிறுத்த உரிமை பறிபோகும். இதனால், ஒட்டுமொத்த தொழிலாளா்கள் வா்க்கமும் பாதிக்கப்படும் என முழக்கமிட்டனா்.
இதைத் தொடா்ந்து, புதிய தொழிலாளா் சட்டத் தொகுப்புகள், விதிகளின் நகல்களை தீவைத்து எரித்தனா்.
தொடர்புடையது

அரியலூரில் பராமரிப்பு இல்லாத புதிய பேருந்து நிலையம்!
விபத்தில் முதியவா் உயிரிழந்த வழக்கில் ஓட்டுநா் கைது

தொகுதி மறுவரையறை சட்ட நகலை எரித்து திமுகவினா் போராட்டம்

போக்குவரத்து நெரிசலுக்கு புதிய பேருந்து நிலையமே நிரந்தரத் தீா்வு!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

