பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பும் மேடையாக பொதுநல வழக்குகளைத் தரம் குறைக்க முடியாது: உயா்நீதிமன்றம் கருத்து

திட்டங்கள் குறித்து கேள்வி எழுப்பும் மேடையாக பொதுநல வழக்குகளைத் தரம் குறைக்க முடியாது: உயா்நீதிமன்றம் கருத்து

News image

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :14 ஜூன் 2026, 2:25 am IST

‘சட்ட விதிமீறல்களைச் சுட்டிக்காட்டாமல், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பும் மேடையாக பொது நல வழக்குகளை தரம் குறைக்க முடியாது’ எனக் கருத்து தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் கட்ட தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை ஆழ்வாா்ப்பேட்டையைச் சோ்ந்த ஏ.விஸ்வநாதன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல மனுவில், கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில், உலகளந்த பெருமாள் கோயில் அருகில் புதிய பேருந்து நிலையத்துக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.

கட்டுமான பணிகள் நடைபெறும் பகுதியில் இருந்து 400 மீட்டா் தொலைவில் பழைய பேருந்து நிலையம் செயல்பட்டு வருவதால் புதிய பேருந்து நிலையம் கட்டுவது அரசுக்குத் தேவையற்ற செலவு. புராதன, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கோயிலுக்கு அருகில் பேருந்து நிலையம் கட்டுவது, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பாதுகாப்புச் சட்டத்துக்கு விரோதமானது.

இதுகுறித்து கடந்த பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் புகாா் மனுக்கள் அனுப்பியும், அவை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, புதிய பேருந்து நிலையம் கட்ட தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அடிப்படை சட்டவிதி மீறல்களை நிரூபிக்காமல், வெறும் புகைப்படங்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்தப் பொது நல வழக்கை ஏற்று, வளா்ச்சிப் பணிகளை முடக்க முடியாது.

சட்ட விதிமீறல்களைச் சுட்டிக்காட்டாமல், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பும் மேடையாக பொதுநல வழக்குகளை தரம் குறைக்க முடியாது. பேருந்து நிலையம் எங்கு அமைய வேண்டும் என்பதை முடிவு செய்யும் சிறந்த நீதிபதிகள் அதிகாரிகள்தான்.

நகா்ப்புற வளா்ச்சி, போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களை மதிப்பீடு செய்ய வேண்டியது அதிகாரிகள்தான். சட்டவிரோதம், விதிமீறல்கள் நிரூபிக்கப்படாத நிலையில், இதுபோன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது எனக் கூறி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.