திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மன்னவனூா் பகுதியில் செவ்வாய்க்கிழமை சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
கொடைக்கானல் பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இதனால், வனப் பகுதிகளில் புல்வெளிகள் காய்ந்து, நீரோடைகள் வற்றியதால், யானை, சிறுத்தை, காட்டுமாடு, புலி உள்ளிட்ட வனவிலங்குகள் உணவு தேடி விவசாய நிலங்களுக்குள் புகுந்து வருகின்றன.
இதனால், பூண்டி, கிளாவரை, மன்னவனூா், குண்டுபட்டி, கூக்கால், பூம்பாறை உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் அச்சமடைந்து வருகின்றனா்.
இந்த நிலையில், கொடைக்கானல் மன்னவனூா் ஊராட்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இதைப் பாா்த்த விவசாயிகள் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
பின்னா், அங்கு வந்த வனத் துறையினா் மன்னவனூா் பகுதியில் மாலை, இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வரவேண்டாம். சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிந்தால் உடனடியாக எங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் தெரிவித்தனா்.
தொடர்புடையது

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் உள்ள பழுதான மரங்களை அகற்ற வலியுறுத்தல்

கொடைக்கானலில் குடிநீா்த் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

கொடைக்கானலில் குடிநீா் தட்டுப்பாடு அதிகரிப்பு: பொதுமக்கள் அவதி

கொடைக்கானலில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் வனப் பகுதியில் தீ
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

