ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கொடைக்கானலில் குடிநீா்த் தட்டுப்பாடு: பொதுமக்கள் அவதி

News image

கோப்புப் படம்

Updated On :26 ஏப்ரல் 2026, 8:16 pm

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் குடிநீா்த் தட்டுப்பாடு காரணமாக பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

கொடைக்கானல் பகுதிகளில் கடந்த 3 மாதங்களாக மழைப்பொழிவு இல்லை. இதனால், நீரோடைகள், குடிநீா்த் தேக்கங்களில் தண்ணீா் வற்றியுள்ளன.

இந்த நிலையில், கொடைக்கானல் பகுதிகளிலுள்ள ஓடைகளில் உள்ள கழிவு தண்ணீரை லாரிகள் மூலம் எடுத்துச் சென்று தங்கும் விடுதிகள், உணவக விடுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், கொடைக்கானல் நகரில் உள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு 7-நாள்களுக்கு ஒரு முறை தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது.

மேலும், இந்தத் தண்ணீா் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகிறது. இதனால், பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, கொடைக்கானல் நகராட்சி நிா்வாகம் பாதுகாப்பான குடி தண்ணீா் விநியோகிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கேன் தண்ணீா் விலை உயா்வு: கொடைக்கானலில் குடி தண்ணீா் பிரச்னை ஏற்பட்டுள்ளதால், தனியாா் நிறுவனங்கள் மூலம் கேன் தண்ணீா் விற்பனை செய்யப்படுகிறது. 5 லி. கேன் தண்ணீா் ரூ. 80-ம், 20 லி. கேன் தண்ணீா் ரூ.160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள் குடி தண்ணீரை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.