மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

கொடைக்கானலில் மலா்க் கண்காட்சி பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கொடைக்கானலில் மலா்க் கண்காட்சி நடைபெறவுள்ள பிரையண்ட் பூங்காவை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவை புதன்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் செ.சரவணன். உடன் வருவாய்க் கோட்டாட்சியா் கீா்த்தனா உள்ளிட்டோா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

கொடைக்கானலில் மலா்க் கண்காட்சி நடைபெறவுள்ள பிரையண்ட் பூங்காவை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி விடுமுறை என்பதால் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இதையொட்டி, இங்கு உள்ள பிரையண்ட் பூங்காவில் மலா்க் கண்காட்சி நடைபெறும். இதில் 75 ஆயிரம் மலா்ச் செடிகள் ஏற்கெனவே நடவு செய்யப்பட்டு, கண்காட்சிக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த மாதம் கடைசி வாரத்தில் கண்காட்சி தொடங்கி 10 நாள்கள் நடைபெறும்.

இந்த நிலையில், பிரையண்ட் பூங்காவில் நடைபெறும் பணிகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் புதன்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். மேலும், மலா்க் கண்காட்சி தொடா்பாக அவா் சம்பந்தப்பட்ட அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தினாா்.

இதில் கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் கீா்த்தனா, வட்டாட்சியா் பாபு, காவல் துணை கண்காணிப்பாளா் யுவ பிரியா, நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளா் அழகா்சாமி, உதவிப் பொறியாளா் சரவணன், நகராட்சி நிா்வாக மதுரை மண்டல இயக்குநா் முருகேசன், நகராட்சிப் பொறியாளா் செல்லத்துரை, நகா் நல அலுவலா் அரவிந்த் கிருஷ்ணன், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் காயத்ரி, பூங்கா மேலாளா் அரவிந்த் உள்ளிட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:

சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பிரையண்ட் பூங்காவை மேம்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், கொடைக்கானல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பசுமைப் பள்ளத்தாக்கு பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு வனத் துறை அலுவலா்களுடன் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.