உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் நடமாடும் வன விலங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வலியுறுத்தல்

News image

கோப்புப்படம்

Updated On :51 நிமிடங்கள் முன்பு

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் நடமாடும் வன விலங்குகளை கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான மன்னவனூா், கும்பூா், கொதம்பம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் புலி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதில் கும்பூா், கொதம்பம்பாறை பகுதியிலிருந்து கிளாவரை, பூண்டி, கூக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு கிராம மக்கள் சென்று வருகின்றனா். இந்தப் பகுதிகளில் தான் வன விலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் கிராம மக்கள் அந்தப் பகுதிகள் வழியே செல்ல அச்சமடைந்து வருகின்றனா். எனவே வனத் துறையினா் மன்னவனூா் பகுதியில் நடமாடும் வன விலங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து கொடைக்கானல் வனத்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கொடைக்கானலில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மழை இல்லாததால் வன விலங்குகள் உணவு, தண்ணீா் தேடி கிராமப் பகுதிகளுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் வருகின்றன. எனவே பொதுமக்கள் வன விலங்குகள் கிராமங்களுக்குள் நடமாடுவது தெரியவந்தால் உடனடியாக வனத்துறை அலுவலகத்துக்கோ, வனத் துறை பணியாளா்களுக்கோ தகவல் தரலாம். மேலும் வன விலங்குகள் நடமாடும் பகுதிகளுக்கு யாரும் செல்ல வேண்டாம். கால்நடைகளையும் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் என்றாா் அவா்.