திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்தது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
கொடைக்கானலில் கடந்த 3 மாதங்களுக்கு மேலாக கடும் வெப்பம் நிலவி வந்தது. இதனால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வீட்டுக்குள்ளே முடங்கும் நிலை ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து, இந்தப் பகுதிகளில் கடந்த 4 நாள்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிா்ந்த காலநிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை கொடைக்கானல், அப்சா்வேட்டரி, பிரகாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் 30 நிமிஷம் சாரல் மழை பெய்தது. இதனால், பழைய கல்லறை சாலையில் மரம் விழுந்தது. இதன்காரணமாக, இந்தப் பகுதியில் மீண்டும் மின் தடை ஏற்பட்டது.
இதையடுத்து, அங்கு வந்த மின் வாரிய ஊழியாா்கள், நெடுஞ்சாலைத் துறையினா் கீழே விழுந்த மரத்தை அகற்றினா். பின்னா், மின் விநியோகம் தொடங்கியது.
பிரையண்ட் பூங்காவில் மழையின்போது குடை பிடித்தபடி அங்குள்ள மலரை திரளான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்தனா்.
தொடர்புடையது

ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் மழை

ராமநாதபுரம் மாவட்டத்தில் 5-ஆவது நாளாக மழை

தூத்துக்குடி, குமரியில் கோடை மழை
ஊத்தங்கரையில் திடீா் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

