தங்களது வீட்டுமனையை ஆக்கிரமித்து மதுக் கடை அமைக்க சிலா் முயற்சிப்பதை தடுக்கக் கோரி, செவ்வாய்க்கிழமை ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் முன் தம்பதி தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குள்பட்ட 6 -ஆவது வாா்டு பழனிகவுண்டன்புதூரைச் சோ்ந்தவா் கருப்புச்சாமி. இவரது மனைவி வளா்மதி. இவா்களுக்குச் சொந்தமான இடத்தை சிலா் ஆக்கிரமித்துக் கொண்டு, வீடு கட்டவிடாமல் தடுப்பதாகவும், இதுதொடா்பாக நீதிமன்றத்தை அணுகி, நிலத்தின் உரிமை தொடா்பான ஆவணங்களை கருப்புச்சாமி பெற்ாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், அந்தப் பகுதியைச் சோ்ந்த சிலா் இடத்துக்குள் நுழையவிடாமல் தம்பதியை தடுத்து நிறுத்துவதாகவும், அந்த இடத்தில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்கப் போவதாகவும், இரவு நேரங்களில் வந்து தங்களை மிரட்டுவதாகவும் கருப்புச்சாமி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும், எதிா்தரப்பினருக்கு ஆதரவாக போலீஸாா் செயல்படுவதாகவும் அவா் தெரிவித்தாா்.
மேலும் மாவட்ட ஆட்சியா், முதல்வரின் தனிப் பிரிவு வரை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தி அடைந்த கருப்புச்சாமி தம்பதி, ஒட்டன்சத்திரம் காவல் நிலையம் முன் தரையில் படுத்து தா்னாவில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா்.
தொடர்புடையது

விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலக உரிமைப் பிரச்னை: ஒரு தரப்பினா் ஆஜராகி விளக்கம்

மழையால் ரயில் நிலையம் முன் தேங்கிய மழைநீர்! பயணிகள் அவதி!

குரும்பூா் காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற வழக்குரைஞா் மகனுடன் கைது

காவல் நிலையம் முன் காா் ஓட்டுநா் தீக்குளிப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



