தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

திண்டுக்கல் மருந்தக நிா்வாகி கைது

உரிய ஆவணங்களின்றி மருந்து மாத்திரைகளை இருப்பு வைத்த மருந்தக நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 1:32 am IST

உரிய ஆவணங்களின்றி மருந்து மாத்திரைகளை இருப்பு வைத்த மருந்தக நிா்வாகியை போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல்லைச் சோ்ந்தவா் அப்துல்லா பாஷா (63). இவா் திண்டுக்கல் சந்துக்கடை பகுதியில் மருந்தகம் நடத்தி வருகிறாா். இதை இவரது மகன் ஆரிப் அகமது (32) நிா்வகித்து வருகிறாா்.

இதில் போதை தரும் வலி மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக திண்டுக்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இந்த மருந்தகத்தில் மருந்து ஆய்வாளா் மகேஸ்வரன் உதவியோடு, திண்டுக்கல் நகா் வடக்கு காவல் நிலைய போலீஸாா் திங்கள்கிழமை இரவு சோதனை நடத்தினா். அப்போது அட்டவணைப்படுத்தப்பட்ட மாத்திரைகள் உரிய கொள்முதல் ரசீது, ஆவணங்கள் இல்லாமல் இருப்பு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, ஆவணங்கள் இல்லாத 17,737 மாத்திரைகள், மருந்துகளை ஒன்றிணைத்து கலக்கும் 293 ஆய்வகக் குப்பிகள், 20 ஊசிகள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, ஆரிப் அகமதுவை போலீஸாா் கைது செய்தனா். மருந்தக உரிமையாளா் அப்துல்லா பாஷாவைத் தேடி வருகின்றனா்.