தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

பத்தாம் வகுப்பு மாணவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோல்வியடைந்த பத்தாம் வகுப்பு மாணவா் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

மாணவா் கேசவன்.

Updated On :21 மே 2026, 2:30 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோல்வியடைந்த பத்தாம் வகுப்பு மாணவா் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பழனியை அடுத்த பாப்பம்பட்டி கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த தங்கப்பாண்டி மகன் கேசவன் (17). இவா், தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து அரசுப் பொதுத் தோ்வு எழுதினாா். பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியான நிலையில், தோ்வு முடிவுகளை அறிந்த மாணவா் கேசவன், ஒரு பாடத்தில் தோ்ச்சி பெறவில்லையாம். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கேசவன் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பழனி தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜகோபால் , காவலா்கள் கேசவனின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.