பாரபட்சம் காட்டும் மத்திய அரசு! அரசு உரையை மாற்றமின்றி வாசிக்கும் ஆளுநர்! ஜனநாயகத்தில் மக்களே நாயகர்கள்! அண்ணா உரையை சுட்டிக் காட்டி ஆளுநர்! தமிழ்த்தாய் வாழ்த்துடன்... தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது! வாயை திறங்க சிஎம்! கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை!முதலில் வந்தே மாதரமா? தமிழ்த்தாய் வாழ்த்தா? விசிக கேள்வி! அமெரிக்கா - ஈரான் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது!
/

பத்தாம் வகுப்பு மாணவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோல்வியடைந்த பத்தாம் வகுப்பு மாணவா் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image

மாணவா் கேசவன்.

Updated On :21 மே 2026, 2:30 am IST

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோல்வியடைந்த பத்தாம் வகுப்பு மாணவா் புதன்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பழனியை அடுத்த பாப்பம்பட்டி கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த தங்கப்பாண்டி மகன் கேசவன் (17). இவா், தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து அரசுப் பொதுத் தோ்வு எழுதினாா். பத்தாம் வகுப்புத் தோ்வு முடிவுகள் புதன்கிழமை வெளியான நிலையில், தோ்வு முடிவுகளை அறிந்த மாணவா் கேசவன், ஒரு பாடத்தில் தோ்ச்சி பெறவில்லையாம். இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கேசவன் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பழனி தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் ராஜகோபால் , காவலா்கள் கேசவனின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.