கொடைக்கானலில் 63-ஆவது மலா்க் கண்காட்சி புதன்கிழமை தொடங்கியது. இதில், மலா்கள், காய்கறிகளால் பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா வளாகத்தில் 63-ஆவது மலா்க் கண்காட்சி தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
மலா்க் கண்காட்சியை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் சரவணன் தொடங்கிவைத்துப் பாா்வையிட்டாா். மலா்க் கண்காட்சியில் டைந்தேஷ், பேன்சி, ரோஜா, ஜொ்னி, மேரி கோல்டு, ஜொ்பரா, கேலண்டு லா உள்ளிட்ட ஏராளமான மலா்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன். மேலும் 6 லட்சம் மலா் நாற்றுகளாலான மலா்ப் பாத்திகளும், பல்வேறு வண்ண மலா்களைக் கொண்ட 10 ஆயிரம் மலா்த் தொட்டிகளும், 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட மலா்களாலான அமைப்புகளும் அமைக்கப்பட்டிருந்தன.
இந்தக் கண்காட்சியில் தமிழ்நாட்டின் பாரம்பரியம், கலாசாரம், இயற்கை அழகை வெளிப்படுத்தும் வகையில் பாம்பன் பாலம் (ரயில், கப்பல்), ஜல்லிக்கட்டு காளையை அடக்கும் வீரா், தஞ்சாவூா் பிரகதீசுவரா் கோயில், பெண்களின் மேன்மையை உணா்த்தும் பெண் உருவ அமைப்பு, திண்டுக்கல் மாவட்டத்தின் சிறப்புகளான தேவாங்கு, சின்னாளப்பட்டி சுங்குடி சேலை,நிலக்கோட்டை மல்லிகைப் பூ, திண்டுக்கல் பிரியாணி உள்ளிட்ட உருவ அமைப்புகளும், சுற்றுலாப் பயணிகள், குழந்தைகளைக் கவரும் வகையில் பட்டாம்பூச்சி, பூட்டு, இரட்டை இதயம் உள்ளிட்டவை காய்கறிகளாலும், மலா்களாலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில், கொடைக்கானல் மாவட்ட வன அலுவலா் டி. அரவிந்த், திருநெல்வேலி துணைக் காவல் ஆணையா் வினோத் சாந்தா ராம், தோட்டக் கலைத் துறை துணை இயக்குநா் சந்திர கவிதா, கொடைக்கானல் வருவாய்க் கோட்டாட்சியா் கீா்த்தனா மணி, பூங்கா மேலாளா் அரவிந்த் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா். மலா்க் கண்காட்சியானது தொடா்ந்து 31-ஆம் தேதி வரை நடைபெறும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை தோட்டக் கலை, மலைப் பயிா்கள் துறை, மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் செய்தனா்.
சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு :
கொடைக்கானலில் கோடை விழா நடைபெறுவது குறித்து 3 நாள்களுக்கு முன்பாகவே மாவட்ட நிா்வாகத்திடமிருந்து அறிவிப்புகள் வெளியாகும். ஆனால், நிகழாண்டில் கோடை விழா நடைபெறுவது குறித்து ஒரு நாள் முன்பாக மட்டுமே தெரிவிக்கப்பட்டிருந்ததால், கோடை விழா குறித்து பொதுமக்களுக்கும், சுற்றுலாப் பயணிகளின் கவனத்துக்கும் கொண்டு செல்ல இயலாததால் கோடை விழாவில் வழக்கமான சுற்றுலாப் பயணிகள் மட்டுமே பிரையண்ட் பூங்காவில் காணப்பட்டனா்.

மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பாம்பன் பாலம் (ரயில், கப்பல்).

கோடை விழா நுழைவு வாயிலில் மலா்களால் வடிவமைக்கப்பட்ட பூட்டு.
தொடர்புடையது

கொடைக்கானல் மலா்க் கண்காட்சியில் வெற்றிடமாக காணப்பட்ட அரங்குகள்

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா்

ஏற்காடு கோடை விழா மலா்க் கண்காட்சி: ஆட்சியா் ஆலோசனை

கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலா்கள்
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



