மேலூர் அருகே சருகுவலையபட்டி கிராமத்தில் ஓடைக்கருப்பு கோயில் திருவிழாவையொட்டி, புதன்கிழமை மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
இங்குள்ள கம்புளிக் கண்மாயில் நீர்வற்றியதை அடுத்து, மீன்பிடித் திருவிழா நடத்தப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வலைகளுடன் வந்து கண்மாயில் மீன்பிடித்தனர்.