இன்று மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

மதுரையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வியாழக்கிழமை (மே 18) நடைபெறுகிறது.
Updated on
1 min read

மதுரையில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வியாழக்கிழமை (மே 18) நடைபெறுகிறது.
   இது குறித்து மதுரை மின்விநியோக வட்ட தெற்கு செயற்பொறியாளர் ரெ. சுஜா விடுத்துள்ள செய்திக் குறிப்பு: மதுரை மேற்பார்வைப் பொறியாளர் தலைமையில், தெற்கு கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது.
   இந்தக் கூட்டத்தில், சுப்பிரமணியபுரம், ஆரப்பாளையம், தமிழ்ச் சங்கம் சாலை, யானைக்கல், டவுன்ஹால் சாலை, மாகாளிபட்டி, மகால், ஜான்சிராணி பூங்கா, அரசமரம் பிள்ளையார் கோயில், தெப்பக்குளம், கீழவாசல், முனிச்சாலை, சிந்தாமணி, அனுப்பானடி ஊரகப் பகுதி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மின்நுகர்வோர் மின்சாரம் சம்பந்தமாக தங்களது குறைகளை நேரிலும், மனுக்கள் மூலமும் அளிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com