மதுரை மாவட்டம் நரசிங்கம்பட்டியில் பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நரசிங்கம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (ஜூலை 24 ஆம் தேதி) நடைபெறவுள்ளது. அதனால், செவ்வாய்க்கிழமை காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் தடைப்படும் என மதுரை கிழக்கு மின்பகிர்மானவட்ட செயற்பொறியாளார் பெ.குமார் தெரிவித்துள்ளார். மின்விநியோகம் தடைப்படும் பகுதிகள் விவரம்: நரசிங்கம்பட்டி, வெள்ளரிப்பட்டி, தெற்குத்தெரு, வலச்சிகுளம், டி.வல்லாளபட்டி, தர்மதானப்பட்டி, மருதூர் வேப்படப்பு, பூஞ்சுத்தி, சுண்ணாம்பூர், இடையபட்டி, அரிட்டாபட்டி, அ.வல்லாளபட்டி,எட்டிமங்கலம், மாங்குளம், மாத்தூர், பட்டணம் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








