அரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் சாவு

மதுரை அருகே கால்நடைகளுக்கு புல் அறுக்கச் சென்ற பெண், வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால், மின்சாரம் பாய்ந்து

Updated On :14 மே 2018, 12:09 am

மதுரை அருகே கால்நடைகளுக்கு புல் அறுக்கச் சென்ற பெண், வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததால், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாக, ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை அருகே உள்ள எம்.சத்திரப்பட்டி கருவனூரைச் சேர்ந்த மலைச்சாமி மனைவி கச்சம்மாள் (50). இவர், அப்பகுதியில் உள்ள பண்ணையில் கால்நடைகளுக்கு புல் அறுக்கச் சென்றுள்ளார். முதல் நாள் வீசிய காற்றில் மின்கம்பி அறுந்து வயலில் விழுந்து கிடந்துள்ளது. இதை அறியாத கச்சம்மாள் புல் அறுக்கச் சென்றபோது, அந்த மின்கம்பியை மிதித்து விட்டார். இதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து அவரது கணவர் மலைச்சாமி அளித்த புகாரின்பேரில், எம்.சத்திரப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.