மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
மதுரை கோச்சடை முத்தையா கோயில் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் சண்முகநாதன் (24). இவர் மதுரை மாவட்டம் பரவையில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இரு நாள்களுக்கு முன், வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். நான்குவழிச் சாலையில் வைகை பாலத்தில் வந்தபோது நிலைத்தடுமாறி தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சண்முகநாதனை அப்பகுதியினர் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சைப் பலனின்றி சண்முகநாதன் திங்கள்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து சமயநல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜெயிலர் - 2: ஷாருக்கானுக்குப் பதிலாக பவன் கல்யாண்?

எஸ்ஐஆர் நடவடிக்கையால் எனக்கு 10,000 வாக்குகள் இழப்பு! - கேரள முன்னாள் முதல்வரின் மகன் பேச்சு!

ம.பி.யில் 70 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன்!

ஆடியோ வெளியானபிறகு ஆ. ராசா வெளியே வரவில்லை! அண்ணாமலை | BJP | DMK
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

