சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த இளைஞர் சாவு

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.

Updated On :21 மே 2018, 11:12 pm

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
மதுரை கோச்சடை முத்தையா கோயில் தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் சண்முகநாதன் (24). இவர் மதுரை மாவட்டம் பரவையில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் இரு நாள்களுக்கு முன், வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். நான்குவழிச் சாலையில் வைகை பாலத்தில் வந்தபோது நிலைத்தடுமாறி தவறி விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சண்முகநாதனை அப்பகுதியினர் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகிச்சைப் பலனின்றி சண்முகநாதன் திங்கள்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து சமயநல்லூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.