மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், செங்காரையைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் பிரவீன் (20). இவர், மதுரை மாவட்டம், கருமாத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் பிரவீன் இருசக்கர வாகனத்தில் திருமங்கலம்-சோழவந்தான் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியே வந்த வேன், பிரவீனின் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து செக்கானூரணி போலீஸார், வேன் ஓட்டுநர் கந்தசாமி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

