குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற மதுரை மாணவர்களுக்குப் பாராட்டு

புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற மதுரை என்சிசி மாணவர்கள் திங்கள்கிழமை பாராட்டப்பட்டனர்.
Updated on
1 min read

புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற மதுரை என்சிசி மாணவர்கள் திங்கள்கிழமை பாராட்டப்பட்டனர்.
அமெரிக்கன் கல்லூரி 2-ஆம் ஆண்டு வணிகவியல் மாணவர் அகஸ்டின் ஜெபக்குமார், தியாகராஜர் கல்லூரி கணிதவியல் துறை 2-ஆம் ஆண்டு மாணவர் டேனியல் ரோஷன் ஆகியோர் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்றனர். இவர்கள் என்சிசி மதுரை கடற்படை பிரிவில் பயிற்சி பெற்றவர்கள்.
 தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபர் என்சிசி அணி சார்பில் இவர்கள் இருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 அதேபோல, அமெரிக்கன் கல்லூரி இயற்பியல் துறை 2-ஆம் ஆண்டு மாணவரான லோகேஷ்வர்,  குடியரசு தினத்தையொட்டி தில்லியின் என்சிசி மாணவர்களுக்கான போட்டிகளில் பங்கேற்றார். 
அதில் போர்க் கப்பல் செய்யும் போட்டியில் தங்கப் பதக்கமும், பாய்மரக் கப்பல் தயாரிப்புப் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.
 தில்லியில் இருந்து மதுரை திரும்பிய இந்த 3 மாணவர்களுக்கும் மதுரை என்சிசி குரூப் சார்பில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
 அப்போது, கடற்படை என்சிசி கமாண்டிங் அதிகாரி வி.பி.செந்தில் 3 மாணவர்களையும் பாராட்டி வாழ்த்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com