கோழி வியாபாரியிடம் ரூ.72 ஆயிரம் பறிமுதல்

மேலூர் அருகே கோழி வியாபாரியிடம் இருந்து ரூ.72 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
Updated on
1 min read

மேலூர் அருகே கோழி வியாபாரியிடம் இருந்து ரூ.72 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
 மேலூர்- திருப்பத்தூர் சாலையில் கீழவளவு போலீஸார் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் வாகனங்களை சோதனையிட்டனர். அப்போது, சிவகங்கை மாவட்டத்திலிருந்து மேலூர் வந்த மினி லாரியைச் சோதனை செய்தனர். அதில் வந்த கிடாரிப்பட்டியைச் சேர்ந்த தமிழரசன் வைத்திருந்த ரூ.72,280-க்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. அவர் கோழி விற்பனைசெய்து விட்டு இந்த பணத்தை கொண்டுவந்ததாகத் தெரிவித்துள்ளார். 
ஆனால் அவர் முன்னுக்குப்பின் முரணாக கூறியதையடுத்து பணம் பறிமுதல் செய்யப்பட்டு மேலூர் கருவூல அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com