உசிலம்பட்டி அருகே குடிநீர் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

உசிலம்பட்டி அருகே குடிநீர் சீராக   விநியோகிக்கவில்லை எனக் கண்டித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை  சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உசிலம்பட்டி அருகே குடிநீர் சீராக   விநியோகிக்கவில்லை எனக் கண்டித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை  சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி அருகே தும்மக்குண்டு பகுதியில் கடந்த சில மாதங்களாக குடிநீர் சீராக விநியோகிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இது  குறித்து  புகார் அளித்தும்  எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, குடிநீர் சீராக வழங்கக் கோரி உசிலம்பட்டி -திருமங்கலம் பிரதான  சாலையில் கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனர். 
தகவல் அறிந்து வந்த சிந்துபட்டி போலீஸார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு  வார்த்தை நடத்தினர். விரைவில் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூறியதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com