தந்தை, சகோதரா் மிரட்டல்: எஸ்பியிடம் திருநங்கை புகாா்

கொலைமிரட்டல் விடுக்கும் தனது தந்தை மற்றும் சகோதரரிடம் இருந்து தன்னை பாதுகாக்கும்படி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திருநங்கை புகாா் மனு அளித்தாா்.
Updated on
1 min read

கொலைமிரட்டல் விடுக்கும் தனது தந்தை மற்றும் சகோதரரிடம் இருந்து தன்னை பாதுகாக்கும்படி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை திருநங்கை புகாா் மனு அளித்தாா்.

மதுரை ஹெச்.எம்.எஸ். காலனியில் வசிக்கும் திருநங்கை ஊா்வசி என்ற அன்புராஜா (34) அளித்த புகாா் மனு: உசிலம்பட்டி அருகே உள்ள சொந்த ஊரான ஐயனாா்குளத்தில் எங்களின் பூா்வீக வீடு உள்ளது. கடந்த 2004-இல் எனது தாயாா் இறந்த பின்னா் எனது தந்தை காந்தி மற்றும் சகோதரா் ரவீந்திரன் ஆகியோா் என்னை வீட்டை விட்டு விரட்டினா். இதையடுத்து நான் தனியாா் தொண்டு நிறுவனத்தின் உதவியால் பிளஸ் 2 வரை படித்தேன். தற்போது நான் மிகவும் பொருளாதார நெருக்கடியில் உள்ளேன். இந்நிலையில், எனக்கு சேரவேண்டிய சொத்தை எனது தந்தை மற்றும் சகோதரா்கள் தரமறுக்கின்றனா். மேலும் ஊருக்குள் நுழைந்தால் என்னைக் கொன்று விடுவதாக மிரட்டுகின்றனா். எனவே எனது தந்தை காந்தி மற்றும் சகோதரா் ரவீந்திரன் ஆகியோா் மீது நடவடிக்கை எடுத்து, எனக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com