குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற மதுரை மாணவர்களுக்குப் பாராட்டு

புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற மதுரை என்சிசி மாணவர்கள் திங்கள்கிழமை பாராட்டப்பட்டனர்.

புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற மதுரை என்சிசி மாணவர்கள் திங்கள்கிழமை பாராட்டப்பட்டனர்.
அமெரிக்கன் கல்லூரி 2-ஆம் ஆண்டு வணிகவியல் மாணவர் அகஸ்டின் ஜெபக்குமார், தியாகராஜர் கல்லூரி கணிதவியல் துறை 2-ஆம் ஆண்டு மாணவர் டேனியல் ரோஷன் ஆகியோர் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்றனர். இவர்கள் என்சிசி மதுரை கடற்படை பிரிவில் பயிற்சி பெற்றவர்கள்.
 தமிழ்நாடு-புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபர் என்சிசி அணி சார்பில் இவர்கள் இருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 
 அதேபோல, அமெரிக்கன் கல்லூரி இயற்பியல் துறை 2-ஆம் ஆண்டு மாணவரான லோகேஷ்வர்,  குடியரசு தினத்தையொட்டி தில்லியின் என்சிசி மாணவர்களுக்கான போட்டிகளில் பங்கேற்றார். 
அதில் போர்க் கப்பல் செய்யும் போட்டியில் தங்கப் பதக்கமும், பாய்மரக் கப்பல் தயாரிப்புப் பிரிவில் வெண்கலப் பதக்கமும் வென்றார்.
 தில்லியில் இருந்து மதுரை திரும்பிய இந்த 3 மாணவர்களுக்கும் மதுரை என்சிசி குரூப் சார்பில் திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
 அப்போது, கடற்படை என்சிசி கமாண்டிங் அதிகாரி வி.பி.செந்தில் 3 மாணவர்களையும் பாராட்டி வாழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com