மேலூர், தனியாமங்கலம், செக்கானூரணியில் ஜனவரி 5 மின்தடை

மேலூர், தனியாமங்கலம், செக்கானூரணி  பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 5) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

மேலூர், தனியாமங்கலம், செக்கானூரணி  பகுதிகளில் சனிக்கிழமை (ஜன. 5) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மதுரை கிழக்கு மின் பகிர்மாந வட்ட செயற்பொறியாளர் இரா.கண்ணன் தெரிவித்திருப்பதாவது: மேலூர், தனியாமங்கலம் துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை (ஜன. 5) நடைபெறவுள்ளன. எனவே, அன்று காலை 9 மணியிலிருந்து மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடைப்படும்.
    மின்விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம்: மேலூர், தும்பைப்பட்டி, நாவினிப்பட்டி, வண்ணான்பாறைப்பட்டி, பதினெட்டாங்குடி, திருவாதவூர், கொட்டகுடி மற்றும் பனங்காடி.
    தனியாமங்கலம், பெருமாள்பட்டி, சருகுவலையபட்டி, கீழையூர், கீழவளவு, இ.மலம்பட்டி, கொங்கம்பட்டி, செம்மினிப்பட்டி, முத்துச்சாமிபட்டி, உறங்கான்பட்டி, வெள்ளலூர், தர்மசானப்பட்டி, கோட்டநத்தம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகள் என அவர் தெரிவித்துள்ளார்.
செக்கானூரணியில்: மின்வாரியத்தின் செக்கானூரணி செயற்பொறியாளர் வி.ஆதிலெட்சுமி தெரிவித்திருப்பதாவது:
           செக்கானூரணி துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை (ஜன. 5) பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. எனவே அன்று காலை 9 முதல் பகல் 2 மணி வரை செக்கனூரணி, கே.புளியங்குளம், பன்னியான், கிண்ணிமங்கலம், மாவிலிப்பட்டி, மூனாண்டிபட்டி, ஆ.கொக்குளம், கருமாத்தூர், கண்ணனூர், சாக்கலிப்பட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலை நகர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com