மதுரையில் 4 இருசக்கர வாகனங்கள் செவ்வாய்க்கிழமை தீயில் எரிந்து சேதமாகின.
மதுரை வடக்கு மாசி வீதியைச் சேர்ந்தவர் பொன்னு கோனார். இவர் தனது புதிய இருசக்கர வாகனத்தை வீட்டின் முன் நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் பொன்னுகோனாரின் இருசக்கர வாகனம் தீப் பற்றி எரிந்தது தெரியவந்தது.
இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்து விட்டு, அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் அருகில் இருந்த மற்ற வாகனங்களுக்கும் தீ பரவியது. தொடர்ந்து அப்பகுதியில் உள்ளவர்கள் போராடி தீயை அணைத்தனர். ஆனால், இந்த தீ விபத்தில் பொன்னுகோனாரின் புதிய இரு சக்கர வாகனம் உள்பட 4 இருசக்கர வாகனங்கள் முற்றிலுமாக எரிந்து சேதமாகின. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் நடத்திய விசாரணையில், புதிய இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து பொன்னு கோனார் அளித்த புகாரின் பேரில் திலகர்திடல் போலீஸார் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.