மதுரை அருகே மாட்டுக் கொட்டகையை சுத்தம் செய்தபோது வழுக்கி விழுந்த பெண், சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜாங்கம். இவரது மனைவி சத்யா (40), கடந்த புதன்கிழமை மாட்டுக் கொட்டகையை சுத்தம் செய்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே, அவரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும், சிகிச்சைப் பலனின்றி சத்யா வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து அவரது கணவர் ராஜாங்கம் அளித்த புகாரின்பேரில், நாகமலை புதுக்கோட்டை போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.