மதுரை எஸ்.எஸ்.காலனி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.75 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக வியாழக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை எஸ்.எஸ்.காலனி முத்துராமலிங்கம் தெருவைச் சேர்ந்தவர் விஜயன்(37). இவர் தனது வீட்டைப் பூட்டி விட்டு குடும்பத்தினருடன் புதன்கிழமை வெளியூர் சென்று விட்டு இரவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.75 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. சம்பவம் தொடர்பாக விஜயன் அளித்தப் புகாரின் பேரில் எஸ்.எஸ்.காலனி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.