லாரியில் கொண்டு செல்லப்பட்ட 400 மின்சார குக்கர்கள் பறிமுதல்
By DIN | Published On : 30th March 2019 07:26 AM | Last Updated : 30th March 2019 07:26 AM | அ+அ அ- |

மதுரை அருகே லாரியில் கொண்டு செல்லப்பட்ட 400 மின்சார குக்கர்களை தேர்தல் அலுவலர்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
துணை வட்டாட்சியர் எல்.திருமுருகன் தலைமையிலான மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி நிலைக் கண்காணிப்புக் குழுவினர் மதுரையை அடுத்த பொய்கைக்கரைப்பட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த லாரியைச் சோதனையிட்டதில், அதில் 400 மின்சார குக்கர்கள் இருப்பது தெரியவந்தது. மதுரை கே.கே.நகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து அவை கொண்டு செல்லப்படுவதாக ஆவணங்கள் இருந்தன.
அதில் அவற்றை வாங்கியவர் முகவரி எஸ்.எஸ்.காலனி என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், லாரியில் இருந்தவர்கள் வெவ்வேறு இரு முகவரிக்கு கொண்டு செல்வதாகக் கூறியுள்ளனர். அதையடுத்து அவற்றைப் பறிமுதல் செய்த தேர்தல் அலுவலர்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் யா.ஒத்தக்கடையில் உள்ள மதுரை கிழக்கு வட்டாட்சியர் அலுவலக பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...