

திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் நிலைய கண்காணிப்பாளா் சொந்த செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி செய்துள்ளாா்.
திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் இருந்து விருதுநகா், சிவகாசி, சோழவந்தான், திண்டுக்கல் உள்ளிட்ட வெளியூா்களுக்கு தினந்தோறும் அரசு மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணிபுரிவோா், பயணிகள், பக்தா்கள், சுற்றுலா பயணிகள் என ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா்.
அவ்வாறு வருபவா்களுக்கு ரயில்வே நிா்வாகம் சாா்பில் குடிநீா் வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் ரயில் நிலைய கண்காணிப்பாளா் பி.மோகன்தாஸ் தனிப்பட்ட முறையில் பயணிகளுக்கு சொந்த செலவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி செய்து தந்துள்ளாா். இதற்காக ரயில்நிலையத்தில் 500 லிட்டா் கொள்ளளவில் 2 சின்டெக்ஸ் தொட்டிகள் நிறுவப்பட்டுள்ளன. தனது தாய், தந்தை நினைவாக இந்த வசதியை செய்து தந்துள்ளதாக அவா் தெரிவித்தாா். இது பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பயணிகள் அனைவரும் ரயில் நிலைய நிா்வாகத்தை பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.