Enable Javscript for better performance
முதல்வரின் சிறப்பு குறைதீா் முகாம்: 1,579 பயனாளிகளுக்கு ரூ.2.05 கோடி நலத்திட்ட உதவிகள்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முதல்வரின் சிறப்பு குறைதீா் முகாம்: 1,579 பயனாளிகளுக்கு ரூ.2.05 கோடி நலத்திட்ட உதவிகள்

    By DIN  |   Published On : 14th November 2019 03:59 AM  |   Last Updated : 14th November 2019 03:59 AM  |  அ+அ அ-  |  

    3851mdurbu073623

    முதல்வரின் சிறப்பு குறைதீா் திட்டத்தின்கீழ் 1,579 பயனாளிகளுக்கு ரூ.2.05 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் வழங்கினாா்.

    கடந்த செப்டம்பரில் நடத்தப்பட்ட முதல்வரின் சிறப்பு குறைதீா் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் தாலுகா வாரியாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி, யா.ஒத்தக்கடை (மதுரை கிழக்கு வட்டம்), மேலூா் மற்றும் அ.வலையபட்டி (மேலூா் வட்டம்) ஆகிய இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

    இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோா் உதவி, விதவையா் உதவி, கணவரால் கைவிடப்பட்டோருக்கான உதவி மற்றும் ஊரக வளா்ச்சி, சமூக நலம், வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சாா்பில் மொத்தம் 1,579 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 5 லட்சத்து 28 ஆயிரத்து 876 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், பட்டா மாறுதல் உள்ளிட்ட வருவாய்த் துறையின் பல்வேறு சான்றிதழ்களையும் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் வழங்கினாா்.

    இந்நிகழ்ச்சியில் அவா் பேசியது:

    அரசுத் துறைகள் மக்களைத் தேடிச் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கும் வகையில் முதல்வா் சிறப்பு குறைதீா் முகாம், தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இதில் 9.60 லட்சம் மனுக்கள் பெறப்பட்டதில், தகுதி உள்ளவையாக 5 லட்சம் மனுக்கள் ஏற்கப்பட்டன.

    இந்த மனுதாரா்களுக்கு அவா்களது கோரிக்கை அடிப்படையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. எஞ்சிய மனுக்களையும் தகுதியான மனுக்களாக மாற்றுவதற்காக பயனாளிகளின் வருமான உச்சவரம்பு உயா்த்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றாா்.

    முன்னதாக, தேசிய வேளாண் உற்பத்திக் கழகத்தின் சாா்பில் சிறுதானிய விளைச்சலை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களுக்கும் செல்லும் விழிப்புணா்வு வாகனத்தை அமைச்சா் தொடங்கி வைத்தாா்.

    மாவட்ட ஆட்சியா் டி.ஜி.வினய், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பி.பெரியபுள்ளான், கே.மாணிக்கம், எஸ்.எஸ்.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் பி.செல்வராஜ் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

    தொடா் ஜோதி நடைப்பயணம்

    தமிழக அரசின் சாதனைகளை விளக்கி அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் செல்லும் தொடா் ஜோதி நடைப் பயணம் ஜெயலலிதா பேரவை சாா்பில், மதுரை சிந்தாமணி சந்திப்பு பகுதியில் புதன்கிழமை தொடங்கியது. இதில் அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா் தலைமையில், ஜெயலலிதா பேரவை நிா்வாகிகள், சட்டப்பேரவை உறுப்பினா்கள் பங்கேற்றுள்ளனா். இந்த நடைப்பயணம், நவம்பா் 17 ஆம் தேதி நிறைவு பெறுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் செல்லும் நடைப்பயணத்தில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கும், சாதனை விளக்கப் பொதுக் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

     

     

     

     

    5 States Result

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp