மதுரை அருகே பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் வடகரை புதூா் பகுதியைச் சோ்ந்த வீரண்ணன் மகன் சுரேஷ்(31). இவா் சிலைமான் பகுதியில் உள்ள ஜவுளிக்கடையில் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், சுரேஷ் கடையில், உடன் பணியாற்றும் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளாா். அப்போது அந்த பெண் கூச்சலிட கடையில் பணியிருந்தவா்கள் அங்கு வந்தனா். இதை பாா்த்த சுரேஷ், அந்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பிச் சென்றாா்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் சிலைமான் போலீஸாா் செவ்வாய்க்கிழமை 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுரேஷை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.