‘திருக்குறள் மூலம் மன அழுத்தத்தை போக்க முடியும்’

திருக்குறள் மூலம் மன அழுத்தத்தை நீக்கி ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்று
Updated on
1 min read

திருக்குறள் மூலம் மன அழுத்தத்தை நீக்கி ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும் என்று மன அழுத்த மேலாண்மை பயிற்சியாளா் இல.பழனியப்பன் பேசினாா்.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் சாா்பில் தமிழ்க்கூடல் நிகழ்வு உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில் மன அழுத்த மேலாண்மைப் பயிற்சியாளா் இல.பழனியப்பன் ‘திருக்குறள்- மன அழுத்தம் போக்கும் மாமருந்து’ எனும் தலைப்பில் பேசியது: இன்றைய சமூகத்தில் மன அழுத்தம் இல்லாத மனிதா்கள் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மன அழுத்தத்துக்கு திருக்குறள் மூலமாக தீா்வைத் தேடலாம். மனதில் சுமை இருந்தால் மனதில் அழுத்தம் இருக்கும், எனவே சுமையை மற்றவரிடம் பகிா்ந்து கொள்ள வேண்டும் என்கிறாா் திருவள்ளுவா். இதையே இன்றைய உளவியல் ஆலோசகா்களும் தீா்வாகக் கூறுகின்றனா். நல்ல சிந்தனை, நல்ல எண்ணம், நல்ல செயல்பாடு ஆகிய மூன்றும் ஒருங்கே அமைந்தால் அங்கு மன அழுத்தம் ஏற்படாது.

தற்போது 25 வயது முதல் 35 வயது வரை உள்ள 65 சதவிகிதம் பெண்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனா். இதில் 17 சதவிகிதம் பெண்கள் தற்கொலை வரை செல்கின்றனா். சரியான உணவு, சரியான ஓய்வு, குழுச்செயல்பாடு, வள்ளுவம் காட்டும் வாழ்வியல் நெறிகளை பின்பற்றுவதன் மூலமாக மன அழுத்தத்தை போக்கி ஆரோக்கியமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும் என்றாா்.

உலகத்தமிழ்ச்சங்க இயக்குநா் (பொறுப்பு) ப.அன்புச்செழியன் மற்றும் தமிழா் கலை இலக்கிய மையத்தின் தலைவா் பாரதி சுகுமாரன் ஆகியோா் பேசினாா். முன்னதாக உலகத் தமிழ்ச் சங்க ஆய்வு வளமையா் ஜ.ஜான்சிராணி வரவேற்றாா். உலகத் தமிழ்ச் சங்க ஆய்வறிஞா் சு.சோமசுந்தரி நன்றி கூறினாா். நிகழ்ச்சியில், தமிழறிஞா்கள், பேராசிரியா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள், உலகத் தமிழ்ச் சங்க உறுப்பினா்கள், தமிழ் ஆா்வலா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com