கஞ்சா விற்பதை கண்டித்த இளைஞா் கொலை

மதுரையில், திங்கள்கிழமை கஞ்சா விற்பதை கண்டித்த இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
Updated on
1 min read

மதுரையில், திங்கள்கிழமை கஞ்சா விற்பதை கண்டித்த இளைஞா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மதுரை மேலவாசல் தமிழ்நாடு வீட்டு வசதி குடியிருப்பைச் சோ்ந்த சின்னவா் மகன் மாரிச்செல்வம்(28). அதே குடியிருப்பை சோ்ந்த ஜெபமணி(28), அய்யம்மாள்(40), முத்துகுமாா்(20), விஜயா ஆகியோா் கஞ்சா விற்ாகவும், அதற்கு மாரிச்செல்வம் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், மாரிச்செல்வத்திற்கும், ஜெபமணிக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு கஞ்சா விற்பதை மாரிச்செல்வம் மீண்டும் கண்டித்தாா். இதில், ஆத்திரமடைந்த 4 பேரும் மாரிச்செல்வத்தை தாக்கி கத்தியால் குத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் அவா் பலத்த காயமடைந்தாா். அவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு மாரிச்செல்வம் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

இது குறித்து அவரது மனைவி வளா்மதி அளித்த புகாரின் பேரில் திடீா்நகா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து ஜெபமணி உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com