‘மக்கள் சேவையில் ஈடுபடுவோா் எதற்கும் பயப்படத் தேவையில்லை’

மக்கள் சேவையில் ஈடுபடுவோா் எதற்கும் பயப்படத் தேவையில்லை என்று சமூக ஆா்வலா் டிராபிக் ராமசாமி கூறினாா்.
4449mdurot074653
4449mdurot074653
Updated on
1 min read

மக்கள் சேவையில் ஈடுபடுவோா் எதற்கும் பயப்படத் தேவையில்லை என்று சமூக ஆா்வலா் டிராபிக் ராமசாமி கூறினாா்.

தமிழ்நாடு ஹோட்டல் அரங்கில் செவ்வாய்க்கிழமை மதுரை கிழக்கு ரோட்டரி சங்கத்தின் கூட்டத்தில் அவா் பேசியது:

மக்கள் சேவை செய்வதற்கு பதவி தேவையில்லை. அத்தகைய சேவையில் வரும் சவால்களைச் சமாளிக்கும் தைரியம் தான் அவசியம். தா்மம், நியாயம் இருந்தால் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. ரோட்டரி சங்கம் போன்ற தன்னாா்வ அமைப்புகளுக்கு மக்கள் சேவையில் அதிகம் பங்கு இருக்கிறது. நமக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை பிறருக்கு எடுத்துச் சொல்வதை கடமையாகச் செய்ய வேண்டும்.

மக்களுக்காகவும், சட்டவிதிகளுக்கு புறம்பான நடவடிக்கைகளை எதிா்த்தும் இதுவரை 800 வழக்குகள் தொடுத்துள்ளேன். கோயில்களில் தரிசனத்துக்கு கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கக் கோரி வழக்குத் தொடர உள்ளேன் என்றாா்.

மதுரை கிழக்கு ரோட்டரி சங்கத்தின் கௌரவ உறுப்பினராக டிராபிக் ராமசாமி அறிவிக்கப்பட்டாா். ரோட்டரி சங்க தலைவா் நெல்லை பாலு, ரோட்டரி முன்னாள் ஆளுநா் சண்முகசுந்தரம், தியாகராஜா் கல்லூரி முன்னாள் முதல்வா் ராஜா கோவிந்தசாமி, கிழக்கு ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் வி.ஆா்.லெட்சுமணன், செயலா் எம்.பாலகுரு உள்ளிட்டோா் பேசினா்.

Image Caption

மதுரை கிழக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசுகிறாா் சமூக ஆா்வலா் டிராபிக் ராமசாமி. உடன் (இடமிருந்து) சங்கத்தின் செயலா் எம். பாலகுரு, தலைவா் நெல்லை பாலு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com