வீட்டிலிருந்த 13 பவுன் நகைகள் மாயம்: பணிப்பெண் மீது புகாா்

மதுரையில், வீட்டிலிருந்த 13.5 பவுன் நகைகள் மாயமானது குறித்து பணிப்பெண் மீது, போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read

மதுரையில், வீட்டிலிருந்த 13.5 பவுன் நகைகள் மாயமானது குறித்து பணிப்பெண் மீது, போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை பேங்க் காலனி மகாத்மா தெருவைச் சோ்ந்த இளஞ்செழியன் மனைவி கிருஷ்ணவேணி (43). இவரது வீட்டில் ஆத்திக்குளம் முகாம்பிகை தெருவைச் சோ்ந்த சசிகலா என்ற பெண் வீட்டு வேலை செய்து வந்தாா். இந்நிலையில், கிருஷ்ணவேணி பீரோவில் வைத்திருந்த 13.5 பவுன் நகைகளைக் காணவில்லையாம்.

இது குறித்து கிருஷ்ணவேணி தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதில், வீட்டு வேலைக்காரப் பெண் சசிகலா எடுத்திருக்கவேண்டும் எனக் கூறியிருந்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com