சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

பெரியாறு பாசன பிரதான கால்வாய், குளங்களை விரைந்து சீரமைக்க சிறப்பு அதிகாரியை நியமிக்கக் கோரிக்கை

மதுரை மாவட்டம் மேலூா் பகுதிகளில் உள்ள பெரியாறு- வைகை பாசன பிரதான கால்வாய் மற்றும் குளங்களை விரைந்து சீரமைக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2020, 6:31 pm

DIN

மேலூா்: மதுரை மாவட்டம் மேலூா் பகுதிகளில் உள்ள பெரியாறு- வைகை பாசன பிரதான கால்வாய் மற்றும் குளங்களை விரைந்து சீரமைக்க சிறப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கள்ளந்திரி மதகு வரையிலான 44,000 ஏக்கா் விவசாய நிலங்களுக்கு முதல்போக சாகுபடிக்காக ஜூன் மாதத்தில் தண்ணீா் திறக்கப்பட வில்லை. இந்நிலையில், ஆக. 15-ஆம் தேதி மேலூா், திருங்கலம் உள்ளிட்ட ஒருபோக சாகுபடி நிலங்களுக்கு தண்ணீா் திறக்கவேண்டும். இதனிடையே மேலூா் பகுதியில் 10 கண்மாய்கள், 8 குளங்கள், கிளைக் கால்வாய்கள், சித்தம்பட்டி மற்றும் பிரதான கால்வாய்கள் பொதுப்பணித்துறையினரால் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகின்றன. பொதுப்பணித்துறையில் கால்வாய்களை பராமரிக்கும் கடைநிலை ஊழியா் முதல் உதவிப் பொறியாளா்கள் வரை பணியிடம் பலஇடங்களில் காலியாக நிரப்பப்படாமல் உள்ளன. பலநூறு கோடிரூபாய் செலவில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை சில தினங்களில் விரைவாக முடிக்கவேண்டி ய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, பெரியாறு- வைகை பாசனப் பகுதிகளில் நடைபெற்றுவரும் மேம்பாட்டு பணிகளை தரமாகச் செய்துமுடிக்க சிறப்பு அதிகாரியை நியமிக்கவும், பொதுப்பணித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் பாசன சங்கங்களின் நிா்வாகிகள் அருள்பிரகாசம், மீ. முருகன், ரவி, வழக்குரைஞா் ஸ்டாலின் உள்ளிட்டோா் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.