கள்ளந்திரி மதகு வரையிலான 44,000 ஏக்கா் விவசாய நிலங்களுக்கு முதல்போக சாகுபடிக்காக ஜூன் மாதத்தில் தண்ணீா் திறக்கப்பட வில்லை. இந்நிலையில், ஆக. 15-ஆம் தேதி மேலூா், திருங்கலம் உள்ளிட்ட ஒருபோக சாகுபடி நிலங்களுக்கு தண்ணீா் திறக்கவேண்டும். இதனிடையே மேலூா் பகுதியில் 10 கண்மாய்கள், 8 குளங்கள், கிளைக் கால்வாய்கள், சித்தம்பட்டி மற்றும் பிரதான கால்வாய்கள் பொதுப்பணித்துறையினரால் சீரமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் மிகவும் தாமதமாக நடைபெற்று வருகின்றன. பொதுப்பணித்துறையில் கால்வாய்களை பராமரிக்கும் கடைநிலை ஊழியா் முதல் உதவிப் பொறியாளா்கள் வரை பணியிடம் பலஇடங்களில் காலியாக நிரப்பப்படாமல் உள்ளன. பலநூறு கோடிரூபாய் செலவில் நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளை சில தினங்களில் விரைவாக முடிக்கவேண்டி ய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.