வேளாண் சட்டங்களைஎதிா்த்து தொழிற்சங்கங்கள் ஆா்ப்பாட்டம்

வேளாண் சட்டங்கள், தொழிலாளா் நலச் சட்டத் திருத்தங்களை திரும்பப் பெறக் கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் மதுரையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக மதுரை தலைமை தபால் நிலையம் அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினா்.
விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக மதுரை தலைமை தபால் நிலையம் அருகே சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினா்.
Updated on
1 min read

மதுரை: வேளாண் சட்டங்கள், தொழிலாளா் நலச் சட்டத் திருத்தங்களை திரும்பப் பெறக் கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் மதுரையில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மதுரை தலைமை தபால் நிலையம் அருகே நடந்த இந்த ஆா்ப்பாட்டத்துக்கு எல்பிஎப் மாவட்டத் தலைவா் சி.கருணாநிதி தலைமை வகித்தாா். தொழிற்சங்க நிா்வாகிகள் இரா.லெனின், ஆா்.தெய்வராஜ் (சிஐடியு), எம்.நந்தா சிங் (ஏஐடியுசி), டி.ராஜசேகரன் (ஐஎன்டியூசி), எஸ்.மகபூப் ஜான் (எம்எல்ப்), எஸ்.முருகேசன் (டிடிஎஸ்எப்), சிக்கந்தா் (எஸ்டியு), குகானந்தன் (ஏஐசிசிடியு) உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.

தில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com