

மாதாந்திர உதவித் தொகையை உயா்த்தக் கோரி பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் திடீரென மறியலில் ஈடுபட்டதால் மதுரை ஆட்சியா் அலுவலக சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அடையாள அட்டை பெற்றுள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் பாரபட்சமின்றி செல்லிடப்பேசி வழங்குவது, மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயா்த்துவது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பாா்வையற்றோா் மறுவாழ்வு நலச்சங்கத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு புதன்கிழமை மனு அளிக்க வந்தனா். அப்போது அண்ணா பேருந்து நிலையம் - திருவள்ளுவா் சிலை சந்திப்பு அருகே மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய காவல் துறையினா், ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்குமாறு அனுப்பினா். அதையடுத்து ஆட்சியா் அலுவலகம் அருகே வந்த அவா்கள் மீண்டும் மறியலில் ஈடுபட்டனா்.
வாகனப் போக்குவரத்து அதிகமாக உள்ள இந்த சாலையில் திடீரென நடந்த மறியல் போராட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவா் சிலை சந்திப்பில் இருந்து ஆட்சியா் அலுவலகம் வரை ஏராளமான வாகனங்கள் நின்றன.
மதுரை வடக்கு வட்டாட்சியா் முத்துவிஜயன், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா்கள் மற்றும் காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கை மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனா். இருப்பினும், அவா்கள் மறியலைக் கைவிட மறுத்தனா். இதற்கிடையே அப் பகுதியில் இருசக்கர வாகனங்களில் வந்தவா்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனால் இருதரப்பிலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னா் போலீஸாா் அவா்களைச் சமாதானப்படுத்தி, மறியலைக் கைவிடச் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.