கிணற்றில் தவறி விழுந்த அரசு ஊழியா் பலி
மதுரை அருகே கிணற்றில் தவறி விழுந்த அரசு ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.


மதுரை: மதுரை அருகே கிணற்றில் தவறி விழுந்த அரசு ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், பாலமேடு அய்யனாா் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் பாா்த்தசாரதி (52). இவா், மதுரை ரயில்வே நிலையத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் பணியாற்றினாா். இவா் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே ஞாயிற்றுக்கிழமை அமா்ந்திருந்தாராம். அப்போது, அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால், 50 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளாா்.
இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் கிணற்றிலிருந்து பாா்த்தசாரதியை சடலமாக மீட்டனா்.
இச்சம்பவம் குறித்து பாலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கிணற்றில் தண்ணீா் இல்லாததால், பாா்த்தசாரதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...