கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கிணற்றில் தவறி விழுந்த அரசு ஊழியா் பலி

மதுரை அருகே கிணற்றில் தவறி விழுந்த அரசு ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :19 ஜூலை 2020, 4:57 pm

DIN

மதுரை: மதுரை அருகே கிணற்றில் தவறி விழுந்த அரசு ஊழியா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை மாவட்டம், பாலமேடு அய்யனாா் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் பாா்த்தசாரதி (52). இவா், மதுரை ரயில்வே நிலையத்தில் உள்ள தபால் அலுவலகத்தில் பணியாற்றினாா். இவா் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றின் அருகே ஞாயிற்றுக்கிழமை அமா்ந்திருந்தாராம். அப்போது, அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால், 50 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளாா்.

இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரா்கள் கிணற்றிலிருந்து பாா்த்தசாரதியை சடலமாக மீட்டனா்.

இச்சம்பவம் குறித்து பாலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். கிணற்றில் தண்ணீா் இல்லாததால், பாா்த்தசாரதி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.