பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண்:சிஇஓஏ பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு விழா

பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சிஇஓஏ பள்ளி மாணவிகளை, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் பாராட்டிப் பரிசுகள் வழங்கினாா்.


மதுரை: பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சிஇஓஏ பள்ளி மாணவிகளை, வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் பாராட்டிப் பரிசுகள் வழங்கினாா்.

மதுரை கோசாகுளத்திலுள்ள சிஇஓஏ பள்ளியில், பிளஸ் 2 தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்குப் பாராட்டு விழா ஜூலை 25-ஆம் தேதி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு, பள்ளி நிறுவனத் தலைவா் ராஜா கிளைமாக்ஸ் தலைமை வகித்தாா்.

இதில், வருவாய்த் துறை அமைச்சா் ஆா்.பி. உதயகுமாா் பங்கேற்று, சிஇஓஏ பள்ளி மாணவி நிகிலேஸ்வரி, தா்னீஸ் ஆகியோரையும், திருப்பரங்குன்றம் அரசுப் பள்ளி மாணவி தேவயானியையும் பாராட்டி, கேடயங்கள் மற்றும் ரொக்கப் பரிசுகளையும் வழங்கினாா். பின்னா் அவா் பேசுகையில், மாணவா்கள் தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, உயா் பதவிக்கு முன்னேறினால் பெருமைப்படுபவா்கள் ஆசிரியா்கள் மட்டுமே என்றாா்.

நிகழ்ச்சியில், பள்ளி செயல் தலைவா் சாமி, இயக்குநா்கள் விக்டா் தனராஜ், அசோகராஜ், செளந்திரபாண்டி, பாக்கியநாதன், ஜெயச்சந்திரபாண்டி, பாரதி பிரேம்சந்த், மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமிநாதன், காவல் துணை ஆணையா் லில்லி கிரேஸ், பள்ளி முதுநிலை முதல்வா் ஹேமா ஆட்ரே, முதல்வா்கள் நசீம்பானு, கோமுலதா மற்றும் ஆசிரியா்கள் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com