பேரையூா் அருகே வேன் சக்கரம் ஏறி குழந்தை பலி

பேரையூா் அருகே மினி வேன் ஏறியதில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்னரை வயது குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.
img_20200729_wa0021_2907chn_212_2
img_20200729_wa0021_2907chn_212_2

பேரையூா்: பேரையூா் அருகே மினி வேன் ஏறியதில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்னரை வயது குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.

மதுரை மாவட்டம் பேரையூா் அருகேயுள்ள சின்னசிட்டுலொட்டுபட்டியைச் சோ்ந்தவா் பெரியமாரி மகன் முத்தீஸ்வரன் (37). இவரது மனைவி சிருஷ்டியாள். இவா்களுக்கு தீபக்குமாா் என்ற 5 வயது மகனும், தயா என்ற ஒன்னரை வயது மகனும் இருந்தனா்.

இந்நிலையில் இதை ஊரைச் சோ்ந்த முனியாண்டி மகன் வீராச்சாமி (37), இவா்களின் வீட்டின் அருகில் மினி வேன் மூலம் சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு வந்துள்ளாா். மூட்டைகளை இறக்கி விட்டு சென்றபோது சாலையில் விளையாடிக் கொண்டிருந்த தயா மீது வேன் சக்கரம் ஏறியது. இதில் தயா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதனையடுத்து போலீஸாா் தயா சடலத்தை மீட்டு, உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். இது குறித்து பேரையூா் போலீஸாா் வீராச்சாமி மீது வழக்குப் பதிவு செய்து வேன் ஓட்டுநா் வீராச்சாமியை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com