சென்னையிலிருந்து பேருந்தில் மதுரை வந்த பயணிக்கு கரோனா அறிகுறி தென்பட்டதால் தனிமை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருவள்ளூரிலிருந்து வியாழக்கிழமை காலை வந்த பேருந்தை மதுரை கொட்டாம்பட்டி சோதனைச்சாவடியில் நிறுத்தி காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சோதனை செய்தனர். அப்போது பயணிகள் சிலருக்கு கரோனா அறிகுறி தெரியவந்தது.
இதையடுத்து அனைத்து பயணிகளையும் கொட்டகுடி தனியார் மருத்துவமனையில் தங்கி முழுமையாக சோதனை செய்ய வட்டாட்சியர் சிவகாமி உத்தரவிட்டார்.